கே.பி.ஆர் கலைக் கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழச்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் தொழில் மேம்பாட்டு மையம் சார்பாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி இணைய வழியில் (08.05.2021)நடைபெற்றது.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஹெக்ஸாவார் டெக்னாலஜிஸ் மேனேஜர் (Chennai, Hexaware Technologies , RECRUITMENT MANAGER, APAC)ஜெருஸ்வா டேவிட் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். இறுதி ஆண்டு மாணவர்களைப் பணியமர்த்தல் போக்குகள் குறித்து  உரையாடினார்.

தற்போதைய சூழ்நிலையில் வேலைவாய்ப்பில் வெற்றி பெற சிலக் கருத்துக்களைக் குறிப்பிட்டார். மேலும், புத்தகங்களைப் படியுங்கள், புதிய மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், தேர்வு செய்ய சான்றிதழ் செய்யுங்கள், வாய்மொழி திறன் மற்றும் திறனைப் பற்றிய நேர்காணலுக்குத் தயாராகுங்கள், சுயத்தைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை அதிகரித்தல் போன்றவற்றை விளக்கி, கார்ப்பரேட் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு மற்றும் எவ்வாறு பணியமர்த்துவது என்பது குறித்த  நுண்ணறிவை எடுத்துரைத்தார்.