நேரு கலை கல்லூரியின் 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

கோவை பாலக்காடு சாலை திருமலையம்பாளையத்தில்; அமைந்துள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 19ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இனிதே நடைபெற்றது.

விழாவிற்கு நேரு கல்வி நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தனர். நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அனிருதன் வரவேற்புரையாற்றினார்.

மேலும், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழக, துணைவேந்தர், டாக்டர்.பி. காளிராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்பு செய்தார். 2016-2019 ஆம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் முதுகலைப்பாடப்பிரிவில் பயின்ற 1,141 மாணவ – மாணவிகள் தேர்ச்சிப்பெற்றனர். அவர்களுள் இளங்கலைப் பாடப்பிரிவில் 9 மாணவர்களும் முதுகலைப்பாடப்பிரிவில் 08 மாணவர்களும் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கத்தையும், முதல் பத்து இடங்களை இளங்கலைப் பாடப்பிரிவில் 62 முதுகலைப் பாடப்பிரிவில் 13 மாணவர்களும் பெற்றனர். மொத்தமாக 295 மாணவ- மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.