இடையர் வீதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் பிரச்சாரம்

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர் வீதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று (18.03.2021) பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய போகின்றது என்றும், இந்த தொகுதியில் ஓருபுறம் காங்கிரசும், மற்றொரு புறம் இதுவரை கோவையை பற்றி பேசாத, மக்களுக்காக களமிறங்காத,   கோவையின் பாரம்பரியத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை தெரியாத நபரான கமலஹாசனும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்றும், கமல் வாக்கிங், ஜாக்கிங் போகின்றார், கம்பு சுத்துகின்றார் ஸ்டார் ஓட்டலில் தங்கிக்கொண்டு ஆட்டோவில் போகின்றார். கோவை தெற்கு தொகுதி மக்கள் அவருக்கு வாக்களிக்க ஏமாளிகளல்ல என்றும் வானதி சீனவாசன் தனது பிரச்சாரத்தில் கூறினார்.

மேலும் அவர், எந்த திட்டமானலும் மத்திய அரசிடம் பேசுகின்ற சக்தி, டெல்லியில் காரியம் செய்கின்ற சக்தி, இந்த தொகுதி வேட்பாளரான எனக்கு உண்டு என வானதி சீனிவாசன் கூறினார். அதனை தொடர்ந்து, ராஜவீதி தேர்முட்டியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுடன் மதிய உணவை சாப்பிட்டார் வானதி சீனிவாசன்.