இரண்டாம் கட்ட இலவச மற்றும் கட்டாயக் கல்வி சேர்க்கை துவக்கம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கு இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு அக்டோபர் 12 முதல் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான கோவை மாவட்டத்திலுள்ள சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதி பள்ளிகளில், எது நுழைவு நிலையோ (எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அந்த வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் போது புகைப்படம், பிறப்பு சான்று அல்லது பிறப்பு சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிட சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கும் கீழ் உள்ளோர்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.