வீதியில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்

மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஒரே வீதியில் 3 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அந்த பகுதி (வீதி) கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. அடுத்த 14 நாட்கள் அந்த பகுதி (வீதிகள்) தடுப்புகள் கொண்டு அடைக்கப்படுகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், உள் இருக்கும் நபர்கள் வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் இதர கடைகளும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்போது வரை 179 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.