சிஎஸ்கே – வுக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து

ஐபிஎல் 2020 இன்று இரவு துவங்க உள்ள நிலையில் சிஎஸ்கே அணிக்கு சுரேஷ் ரெய்னா வலது தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்ற ஐபிஎல் போட்டிகள் இன்று துவங்குகிறது. முதல் போட்டியாக பலரும் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான சுரேஷ் ரெய்னா இந்த முறை சொந்த காரணங்களால் போட்டிகளால் பங்கேற்கவில்லை. இதனால் பலரும் சோகத்தில் இருந்தாலும் போட்டிகள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நடைபெறுகிறது என்பதில் சற்று ஆறுதல்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்கு வென்று வாருங்கள் என்று தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.