மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி 11.09.2020 அன்று இணைய வழியில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையேற்றுத் தலைமையுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.வி.கே & அசோசியேட்ஸின் பட்டயக் கணக்காளர், கார்த்திக், வருமானவரி செலுத்தும் முறை குறித்த வழிமுறைகளையும்  நடைமுறைகளையும்  தெளிவாக விளக்கினார். இணைய வழியில் வருமான வரி செலுத்தும் முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இறுதியில் பங்கேற்பாளர்களின் மூலம் சமுதாயத்தினர் வருமானவரி செலுத்தும் வழிமுறைகள் தொடர்பாக  விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். மேலும், மாணவர்களுக்கு ஏற்பட்ட ஐயங்களை நீக்கினார்.

இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.