கோவையில் எம்.பி. வசந்தகுமாருக்கு அஞ்சலி

கோவையில் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவை 100 அடி ரோட்டில் அமைந்துள்ள வசந்த் அன்கோ அலுவலகம் முன்பாக  அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்  மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வுக்கு கோவை காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் சௌந்தர குமார், திலகவதி, வசந்த் அன்கோ கிளை மேலாளர்கள் ராஜ்குமார், கனகமணி, சந்தோஷ் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.