சபரிமலையில் அக்டோபர் முதலே பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் மூடப்பட்டிருந்த நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு புஜைக்காக நவம்பர் மாதத்தில் தான் திறக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதத்திலேயே கோவில் நடை திறக்கப்படும் என்று கேரளா தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் கொரோனா அச்சுறுத்தலால் சமீப காலமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மண்டல மற்றும் மகர விளக்கு புஜைக்காக நவம்பர் மாதத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அதுவும் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் தான் அனுமதிக்கப்படும் என்று தெரிந்திருந்த நிலையில் தற்பொழுது துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் மாதத்திலேயே கோவில் நடை திறக்கப்படும் என்று கேரளா தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.