கோவையில் இன்று 395 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கோவை, நூறடி சாலையில் செயல்பட்டு வரும் நகைக்கடையை சேர்ந்த விற்பனையாளர் 58 ஊழியர்கள் உட்பட கோவையில் இன்று 395 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நகைக்கடையை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வதற்காக தற்காலிகமாக அடைக்கப்பட்டது.

மேலும் கோவை அரசு மருத்துவமனையை சேர்ந்த 40 வயது தலைமை செவிலியர், 40 வயது ஆண் மருத்துவப் பணியாளர், இ.எஸ்.ஐ. மருத்துவமனையை சேர்ந்த 35 வயது பெண் மருத்துவப் பணியாளர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 22 வயது பெண் அலுவலகப் பணியாளர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 22 வயது பெண், உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேட்டுப்பாளையத்தில் 38 பேர், செல்வபுரத்தில் 24 பேர், காரமடையில் 19 பேர், சிங்காநல்லூரில் 13 பேர், ஆர்.எஸ்.புரத்தில் 12 பேர், போத்தனூர், சூலூரில் தலா 9 பேர், ரத்தினபுரியில் 8 பேர், நீலிக்கோணாம்பாளையம், வடவள்ளியில் தலா 7 பேர், கணபதி, காந்திமாநகரில் தலா 6 பேர், குனியமுத்தூர், சுல்தான்பேட்டையில் தலா 5 பேர் உள்பட 395 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது.