தமிழகத்தில் நடைபெறும் டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான் டெங்கு காய்ச்சல் ஒழியும்!!!

தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சென்னை கொளத்தூர் தொகுதியை ஆய்வு மேற்கொண்ட பிறகு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். டெங்கு காய்ச்சலால் ஒரு நாளைக்கு 10 பேர் வரை இறக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் டெங்கு ஆட்சி ஒழிந்தால் தான் டெங்கு காய்ச்சல் ஒழியும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.