பெயரை மாற்றினார் சமந்தா

தமிழ்நாட்டு பல்லாவரத்து பொண்ணு சமந்தா, இப்போது ஆந்திர சினிமாவின் அசைக்க முடியாத குடும்பமான அக்னிநேனி நாகேஸ்வரராவ் குடும்பத்தின் மருமகளாகிவிட்டார். விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நெருக்கமான காதலன் காதலியாக நடித்த நாகசைதன்யாவும், சமந்தாவும் நிஜத்திலும் காதலித்தார்கள்.ஆரம்பத்தில் நாக சைதன்யா குடும்பத்தில் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு. நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனா காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் எல்லா எதிர்ப்புகளையும் மீறி காதலில் ஜெயித்தனர். இதனால் அக்னிநேனி குடும்பத்துக்குள் நுழைந்த சமந்தா திருமணத்துக்கு முன்பே நல்ல மருமகள் என்ற பெயரை எடுத்தார். சமந்தாவின் அணுகுமுறைகள் நாகார்ஜூனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி முடித்தார்.அக்னிநேனி குடும்பத்துக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் தனது பெயரை சமந்தா அக்னிநேனி என்று மாற்றிவிட்டார். இந்த தகவலை அவர் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். சமந்தா ருத் பிரபு இப்போது சமந்தா அக்னினேனி. திருமணத்துக்கு பிறகும் சமந்தா நடிக்கிறார்.