தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலுவலகம் (மகளிர் திட்டம்) மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு நடத்தும் படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், சரவணம்பட்டி KGISL கல்லூரியில் 14.1017 இல் காலை 8 முதல் மாலை 4 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக் கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களான ஐடி, இண்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல் கார்மென்ட்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனைத் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு  வழங்கவுள்ளதால், 8வது முதல் தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வேலை வாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் தவறாது தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.