கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மாவட்ட ஆட்சியர்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மாவட்ட ஆட்சியர்

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலி, அவர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் போர்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதத்தின் முதல் வாரம் முதல் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியராக உள்ள ராசாமணியின் பங்கு குறிப்பிடத்தக்க வகையில் இருந்து வருகிறது.

தினமும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை, கட்டுப்பாட்டு மண்டலங்களை நேரில் சென்று பார்வையிடுதல், கொரோனா வைரசை கட்டுப்பட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதிக்காதவர்கள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வந்தார்.

இந்த சூழலில், மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 15ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து ஆட்சியர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், அவர் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்து இன்று (20.7.2020) வீடு திரும்பியுள்ளார்.