கோவையில் பெரியார் சிலை மீது காவிப் பொடி வீச்சு !

கோவையில் சுந்தராபுரம் அருகே உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்களால் காவிப்பொடி வீசப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிப்பொடி வீசிச்சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பெரியாரிய ஆதரவாளர்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பெரியார் ஆதரவாளர்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தகவலறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளர்.

கோவை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தும், பெரியாரிய ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்படுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உள்ள பெரியார் சிலைகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.