பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கிய மாவட்ட அரிமா சங்கம்

நேரு நகர் பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட அரிமா சங்கம் 324 B1 நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் நேரு நகர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை முன்னாள் தலைவர் அரிமா பாஸ்கர் வழங்கினார்.

முன்னாள் மண்டலத் தலைவர் காளியப்பன், முன்னாள் தலைவர் ஏ1 ராயல் கிரைன் சுகுமார் தலைமையில் தலைவர் நந்தகுமார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ஜெகதீஷ், முன்னாள் தலைவர் பாஸ்கர், ஜி.எல்.டி உறுப்பினர் லோகநாதன், துரைசாமி, பர்னிச்சர் செந்தில்குமார், காளப்பட்டி அரிமா சங்க தலைவர் திவாகர், சுப்பிரமணியம், வெங்கடேஷ், எஸ்கேடி செல்வகுமார், ஜோதிடர் பிரசன்னா மணிகண்டன், நிவாஸ் இன்ஜினியர் செமிக், காளப்பட்டி ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது. தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கப்படும்.