செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும்

நடப்பு கல்வி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நடந்து கொண்டிருக்கும் கொரோனா யுத்தத்தில் பாதிப்படைந்த பலதுறைகளில் கல்வித் துறையும் ஒன்று. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையே தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் தான் இதன் தாக்கம் ஏற்பட்டது. இதனால் பத்தாம் வகுப்பிற்கு நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான நடப்பு கல்வி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியவுடன் நடைபெறும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.