625 குடும்பங்களுக்கு இலவச காய்கறி வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தி இருந்தனர்.

அதன்படி கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு 6 வகையான காய்கறிகள் அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை சரவணம்பட்டி பகுதி கழகப் பொறுப்பாளர் பையாக்கவுண்டர் வீடு வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து 625 குடும்பங்களுக்கு வழங்கினார்.

இவருடன் சர்க்கார் சாமகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பி.சுரேஷ்குமார், வெள்ளமடை ஊராட்சி கழகச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.