சங்கரா கல்லூரியில் “ஆர்ப்பூ” கொண்டாட்டம்

சங்கரா மேலாண்மை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஓணம் பண்டிகை ஆர்ப்பூ என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. மகாபலி வேடமணிந்து மாணவர் ஒருவர் மேடையில் தோன்ற, மகாபலியை கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன் வரவேற்று ஓணம் பண்டிகையின் சிறப்புகளை எடுத்துரைத்தார். துணை முதல்வர் பெர்னார்டு எடவர்டு, ஓணம் பண்டிகை குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்கள் அனைவரும் கேரள மாநிலப் பாரம்பரிய உடை அணிந்தும், பாரம்பரிய நடனமான திருவாதிரை நடனமாடியும் சிறப்பாக கொண்டாடினர்.