தமிழகத்தில் கொரோனா இல்லை

– சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் கொரோனாவுக்காக அச்சபடவேண்டிய அவசியம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டகாஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பூரண குணம் அடைந்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் ஒருவர்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.