நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் ஆடு, மாடுகள் கூட தண்ணீர் குடிக்க முடியாத பரிதாப நிலை தொடர்ந்து வருகிறது

இந்தாண்டு பருவமழை பொய்த்துப் போனதால், தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. பெரும்பாலான ஆறுகள் வறண்டு காணப்படும் சூழலில் நொய்யல் ஆற்றில் ஆங்காங்கே தேங்கிடக்கும் தண்ணீரில்கூட சாயப்பட்டறைகள் சாயகழிவுகள் கலந்து வருவதால் தாகத்தோடு நீர் குடிக்க வந்த மாடுகள் சாய கழிவுகளால் நிறைந்த ஆற்றுநீரை குடிக்க முடியாமல் தவித்து வருகின்றன.