ஈசா பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

கோவை பாலக்காடு சாலை நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை கிராமிய முறைப்படி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடையான பட்டு சேலை அணிந்து, கும்மியடித்து நடனமாடி, மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மாணவர்கள் மேள தாளங்கள் வாசித்தும் சிலம்பம் சுற்றியும் சாகச நிகழ்ச்சிகள் நடத்தினர்.

விழாவில் கேரள மாணவிகள் கலாச்சார உடையில் பங்கேற்றது சிறப்பான வரவேற்பைப் பெற்றது. பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதன்மை செயல் அதிகாரி அஜித், தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ், முதல்வர் டாக்டர் ராபர்ட் கென்னடி, நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் ஆகியோர் பரிசு வழங்கினர். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.