ஸ்மார்ட் சிட்டி துவக்க விழா

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிச்சி குளம் புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.52.16 கோடி மதிப்பிலான செயல்திட்ட வரைபட மாதிரியினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் ஆகியோர் உள்ளனர்.