அமரர் கே.பாலதண்டாயுதபுரம் காலனி நற்பணி மன்றம்,கோவை நேரு நகர் அரிமா சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை, ஜீவசுரக்ஷா தன்வந்திரி மருத்துவமனை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம் மசக்காளிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கண்டியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமரர் கே.பாலதண்டாயுதபுரம் காலனி நற்பணி மன்றத்தின் தலைவர் உலகநாதன் அவர்கள் முகாமிற்குத் தலைமை தாங்கினார். நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். கோவை மாவட்ட அரிமா சங்கத்தின் ஆளுநர் அரிமா கருண பூபதி, சிந்தாமணி கூட்டுறவு சொசைட்டியின் தலைவர் சிங்கை யென் முத்து, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தேசிய தலைவர் ஹென்றி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அம்மையப்பர் குரூப்ஸ் சுந்தரம் (எ) பெரியதம்பி, சர்க்கரை நோய் விழிப்புணர்வு குழுவின் மாவட்ட தலைவர் அரிமா செந்தில், மண்டலத் தலைவர் அரிமா காளியப்பன், வட்டாரத் தலைவர் அரிமா ரகுபதி, நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா லாலா ஜி.முத்துராஜ், செயலாளர் அரிமா நந்தகுமார், பொருளாளர் அரிமா தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளர், கலாம் மக்கள் அறக்கட்டளையின் தலைவர், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் அரிமா செந்தில்குமார் முகாமை ஒருங்கிணைத்தார்.
அரிமா பிரசன்ன மணிகண்டன் அவர்களின் ஜீவசுரக்ஷா தன்வந்திரி மருத்துவக் குழுவினர் சுமார் 200 பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இயற்கை மருந்துகளை இலவசமாக வழங்கினர்.