ஜிசாட்-11 செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்த திட்டம்!

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிவேக இணையதள சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கை கோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால் இந்த செயற்கைகோள் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டடது. இந்நிலையில், பிரான்ஸ்கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் ஜிசாட்-11 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.