கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது இதனை ஒட்டி அரசு அலுவலகங்கள் கல்லூரிகள் பள்ளிகள் போன்றவற்றில் இன்று (12.01.2024) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்தி குமார் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகள், அரசு ஊழியர்கள் பாரம்பரிய உடையான வேட்டி சேலையில் கலந்து கொண்டனர். பெண் ஊழியர்களுக்கு கோலப்போட்டிள் நடத்தப்பட்டது.