சுருஜனா நாட்டிய பள்ளியின் முதலாம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் மேலாண்மை இயக்குநர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாகச் சங்கரம் நாட்டியப் பள்ளியின் நிறுவனர் சஸ்மித்தா ஆரோரா மற்றும் டெப்ரி இன்ஜினியரிங் கம்பெனி மேலாண்மை இயக்குநர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் பாம்பே ஹரிகர புத்திர சமாஜ் பஜன் பாபு குழுவினரின் நாமசங்கீர்த்தனமும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி குமாரி நிரஞ்சனாவின் சேக்ஷபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சுருஜனா மாணவிகள் சிறப்பு பாடல்கள் பாடினர். அதை தொடர்ந்து, நடன மணிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டியமாடிய அனைத்து மாணவிகளுக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட் தலைவர் . கிருஷ்ணன் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், நந்தனம் சீனியர் சிட்டிஷன் ஹோம் மேலாண்மை இயக்குநர் ராஜஸ்ஸ்ரீ, தனலட்சுமி, காளியப்பன் பஜன் பாபு ஆகியோர் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினர்.