செல்லப்பிராணிகளின் கண்கவர் கண்காட்சி

ஆனைமலை கேனல் கிளப் நடத்திய நாய்கள் கண்காட்சி மற்றும் கோவை கேட்டெரி சங்கம் நடத்திய பூனைகள் கண்காட்சி ஞாயிறு அன்று இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நாய் கண்காட்சியில் போட்டியிட 30க்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த 250 நாய்கள் கலந்து கொண்டன. கோவை, தமிழகம் என இந்தியாவின் பல இடங்களில் இருந்தும் கலந்துகொண்டது. இந்திய இன நாய்களும் (கொம்பை, சிப்பிப்பாறை), மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இனங்களும் (ரோட்வெய்லர், ஜெர்மன் ஷெஃபர்ட், கிரேட் டேன், ஹஸ்கி) பங்குபெற்றது.

பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பின்பற்றப்படும் இனங்களின் தரத்தின் அடிப்படையில் நாய்களை மதிப்பிட்டனர்.

பூனை கண்காட்சியில் 10 க்கும் மேற்பட்ட இனத்தைச் சேர்ந்த 120 பூனைகள் பங்கேற்றன. இதில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள், இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான இனங்களும் பங்கேற்றன.

இவை ஹைதராபாத், மைசூரு, சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம், திருவனந்தபுரம் மற்றும் கேரளாவின் பல மாவட்டங்களிலிருந்தும் நாக்பூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் பங்கேற்று இருந்தன.

பூனை இனங்களுக்கு உரிய தரநிலைகளை மதிப்பீடு செய்த பின்னர் வெற்றி பெற்ற பூனைகளின் பட்டியல் அறிவிக்கப்படும்.

சுதாகர் கடிகினேனி, ஆனி கரோல் மற்றும் டாக்டர் பிரதீப் ஆகியோர் உள்ளடக்கிய நடுவர் குழு சர்வதேச தரத்தின்படி பூனைகள் கண்காட்சியை மதிப்பீடு செய்தனர்.

நிகழ்வு குறித்து கோவை கேட்டெரி சங்கத்தின் தலைவர் அர்த்தநாரி பிரதாப் கூறுகையில், இந்திய பூனைகளை சர்வதேச அளவிற்கு பராமரிக்கும் விதத்தில் அதனை வளர்ப்பவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். இரண்டுக்குமே சமமான வளர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை காண முடிந்தது எனக் கூறினார்.

சங்கத்தின் பொருளாளர் பிரதீபா கூறுகையில், இயல்பாகவே இந்திய பூனை இனங்கள் சற்று சுட்டியாக இருக்கும் என்று சொன்னாலும் இவர்கள் அதை வளர்த்த விதத்தில் அவர்கள் மிகவும் அமைதியாக இருப்பதை காண முடிந்தது என்றார்.

இந்த இரு கண்காட்சிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களுக்கு தரச்சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டன.