பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மே 5 ம் தேதி, பத்தாம் வகுப்புக்கு மே 6 ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு மே 10-ஆம் தேதி அரசு பொதுத் தோ்வுகள் தொடங்கவுள்ளன.

கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பொதுத் தேர்வு நடைபெறவுள்ளதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத் துறை பின்பற்றி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் முகக்கவசம் அணிய வேண்டுமா என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்வு அறையில் சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர்ந்தாலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கும் முகக்கவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.