குரூப் 4 தேர்வு: 22 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று நள்ளிரவுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், 22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
7,382 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்துகிறது.

10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த தேர்வுக்கு 21 லட்சத்து 83 ஆயிரத்து 225 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பதவிக்கு சுமார் 300 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே முதன்முறையாக குரூப் 4 தேர்வுக்கு இத்தனை பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.