கோவையில் வீடுதேடி கல்வித் திட்டம்: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவையில் கலை நிகழ்ச்சிகளுடன் வீடுதேடி கல்வித்திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, நடப்பு கல்வியாண்டில் மட்டும், ஐந்து மாதங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘கல்வி டிவி’யில் பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டன.

ஆனாலும், மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் கிடைக்கவில்லை. இந்நிலையில், பள்ளி திறந்தாலும், கற்பித்தல் குறைவை போக்கும் வகையில், தன்னார்வலர்களை வைத்து மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, டியூஷன் எடுக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சியுடன் வீடு தேடி கல்வி திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் மாவட்டம் முழுவதும் வீடுதேடி கல்வித் திட்டத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துவக்கி வைக்கப்பட்டது.