குடும்ப நிகழ்வுகளை இப்படியும் நடத்தலாம்!

கோவையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடந்த பல ஆண்டுகளாக செய்து பாரத மாதா நற்பணி அறக்கட்டளை செய்து வருகிறது. அத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் உதவி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர் சங்கீதா அவர்களின் தந்தை சின்னச்சாமி நினைவு நாளை ஆதரவற்ற இல்லங்களுக்கு ஆதரவு தந்து உணவு வழங்கினார்கள்.

“பிறிதொருவருக்கு உதவாமல் கழியும் நாட்கள் அனைத்தும் வீண். தங்கள் குடும்ப சுப துக்க நிகழ்வுகளை இவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்” என பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.