கேரளவுக்குள் செல்ல நெகட்டிவ் சான்றிதழ் அவசியம்!

கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது. கடந்த 17ம் தேதி 13 ஆயிரத்து 835 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.

48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.  கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பரிசோதனை செய்து இருக்க வேண்டும். பரிசோதனை செய்யாமல் வருபவர்கள் கேரளாவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை நடத்த வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும். மேலும், கேரள வருபவர்கள் கோவிட் 19 கேரளா ஜாக்கிரதா என்ற இணையதளத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.