குறும்பர் நலச்சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாக குறும்பர் இன மக்களின், குடும்ப நல சங்க மாநில தலைவர் பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று (2.4.2021)  தெரிவித்துள்ளார் .

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற வேட்பாளரும், அமைச்சருமான எஸ். பி. வேலுமணி அவர்களை கோவை அதிமுக அலுவலகத்தில் சந்தித்தனர்.   அப்போது தங்கள் இன மக்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து, சால்வை அணிவித்தார்.

மேலும் தங்கள் இன மக்களின் சார்பாக 8 கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.