காவல் துறையினருக்கான தபால் வாக்குபதிவு  

கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கான தபால் வாக்குப்பதிவுகள் இன்று (2.4.2021)காலை  துவங்கியது.

கோவை சி.எஸ்.ஐ பள்ளியில், காவலர் பயிற்சி பள்ளி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என 4 மையங்களில் காலை முதல் தபால் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் சி.எஸ்.ஐ பள்ளியில் 10 தொகுதிக்கும், காவலர் பயிற்சி பள்ளியில் 6 தொகுதிக்கும், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் 2 தொகுதிக்கும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிற மாவட்ட காவலர்களும் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.