கொங்குநாடு கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில்  தமிழர் திருநாளாகிய பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் மாணவர்கள் ஒன்றிணைந்து  இன்று (9.1.2018) கொண்டாடினர். இதில் சிறப்பு நிகழ்ச்சியாக பொங்கல் வைத்தல், உறி அடித்தல், சிலம்பாட்டம், பறை இசை மற்றும் பல கிராமிய கலைகள் நடைபெற்றன.

இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர், டாக்டர்.சி.ஏ.வாசுகி தலைமை வகித்தார்.  கல்லூரியின் முதல்வர் வே.பாலசுப்பிரமணியம் வாழ்த்துரை வழங்கினார். மதுரை  ச.வெ.நா. கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் (ப.நி) த.இராஜாராம் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.