இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் துவக்க விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் “இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில்”(Institution Innovation Council) துவக்க விழாவானது (23.11.2020) அன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கே.பி.ஆர் மில்ஸின் நிர்வாக இயக்குனர் அருண் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்கள் தலைமையுரை வழங்கிச் சிறப்பித்தார். ஹைட்ரோ புரோகாவ் பம்ப்ஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெடின் தலைவர் ஸ்ரீனிவாசகிரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை முதன்மையர் கு.குமுதா தேவி IIC துவங்கப்பட்டதற்கானக் காரணங்களையும் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் உறுப்பினர்களின் பொறுப்புகள் பற்றியும் விளக்கிக்கூறினார். மேலும், இம்மன்றத்தின் முதல் கூட்டம் மற்றும் முதல் காலாண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் எடுத்துக்கூறினார். மன்றத்திற்குப் பேராசிரியர்களையும் மாணவ உறுப்பினர்களையும் நியமித்து அவர்களுக்குரியப் பொறுப்புக்களை எடுத்துக் கூறினார்கள். இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவப் பிரதிநிகளும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.