அதிமுக 49வது ஆண்டுவிழா : இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ

அதிமுக.,வின் 49வது ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் நேற்று கோலகலாமக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நால் ரோட்டில் உள்ள அதிமுக கொடிக்கம்பத்தில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் வரக்கூடிய தேர்தலில் வெற்றிபெற கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டியில் நகர செயலாளர் ஏ.சி மகாலிங்கம் மகளிர் அணி செயலாளர் ஹேமலதா 7 வார்டு செயலாளர் பிரகாஷ் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், கனகராஜ் நந்தகுமார், தினேஷ், ஊட்டி குமார், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.