அப்துல் கலாம் நினைவு நாள் – பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம்

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு மாவட்ட அரிமா சங்கம் 324 B1
மேன்மையை நோக்கி. கலாம் மக்கள் அறக்கட்டளை நேரு நகர் அரிமா சங்கம், காளப்பட்டி அரிமா சங்கம் இணைந்து காந்திபுரம் காவல்நிலையத்தில் அருகில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு முகக்கவசம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் வழங்கினார்.
இந்நிக்ச்சியில் காவல் ஆய்வாளர் லதா, கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனரும் நேரு நகர் அரிமா சங்கத்தின் செயலாளருமான செந்தில்குமார், தலைவர் நந்தகுமார் முன்னாள் மண்டல தலைவர் காளியப்பன், சுப்ரமணியம், கிருஷ்ணமூர்த்தி, ராஜகோபால், கனகராஜ், அசோக்குமார், ஸ்ரீ ஹரி ஆகியோர் முன்னிலையில் முகக்கவசம் வழங்கப்பட்டது.