இரண்டாம் அலை தாக்குதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது! – WHO

 கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகள், தங்களின் கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுதலில், பல நாடுகளில் இப்போது நோய் பாதிப்பு கொஞ்சம் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவரும் நாடுகள் அனைத்திலும், லாக்டௌன் வேகமாகத் தளர்த்தப்பட்டும் வருகிறது. உலகம் முழுக்க, பெரும்பாலான நாடுகள் இயல்புக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது. ஆனால் லாக்டௌன் தளர்வு, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்நிறுவனத்தின் அவசர கால மருத்துவரான மைக் ரேயன் இதுகுறித்துப் பேசும்போது, ஒரு சில நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைகிறது என்றாலும் தென் அமெரிக்கா, தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய் தீவிரமடைந்து கொண்டுதான் போகிறது. கொரோனா இத்தனை மாதங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்துள்ள முக்கியமான பாடமே, இந்த வைரஸ் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பரவும் என்பதுதான். எந்த அடிப்படையில் இந்த வைரஸ் பரவுகிறது என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.