ஆஸ்கேர் மற்றும் மக்கள் சேவை மையம் இணைந்து தூய்மையான டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இலவசமாக கைபேசியில் உள்ள கிருமிகளை சுத்தபடுத்தும் கருவியை அறிமுகப்படுத்தி, பொதுமக்களுக்கு இலவசமாக தங்களது கைபேசியில் உள்ள கிருமிகளை சுத்தபடுத்த நகர் முழுவதும் ஒரு வாகனத்தின் மூலம் கொண்டு செல்கின்றனர். இதில் வானதி சீனிவாசன் தனது கைபேசியை இந்த கருவியின் மூலம் சுத்தம் செய்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆஸ்கேர் நிறுவனர்களும், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் மற்றும் மக்கள் சேவை மைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்