ஈசா கல்லூரியில் புரோ கபடி போட்டி

கோவை நவக்கரை சாலையில் உள்ள ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உடற்கல்வி துறைசார்பில் 11வது ஈசா சாம்பியன் டிராபி 2019 புரோ கபடி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் இப்போட்டி நடைபெற்றது இப்போட்டியின் கல்லூரி தலைமை நடவடிக்கை அதிகாரி ஆதர்ஷ் மற்றும் கல்லூரி தலைமை செயல் அதிகாரி அஜித் தொடங்கி வைத்தார். நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகள், கோவை மாவட்டங்களிலிருந்து மொத்தம் 16 பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணிகள் பங்கேற்றனர்.

இறுதிப்போட்டியில், முதலிடம் பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி  அணிக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் இடத்தை பிடித்த ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மூன்றாவது இடத்தைப் பிடித்த ஜே.சி.டி. தொழில்நுட்பக் கல்லூரி அணிக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி தலைமை செயல் அதிகாரி அஜித், நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த், கல்லூரி முதல்வர் ராபர்ட் கென்னடி மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் சுதாகர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.