ஏ சி சி சிமெண்ட் நிறுவனம் சார்பில் சுமார் 25 லடசம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாகை,திருவாரூர்,தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் ஏ சி சி சிமெண்ட் நிறுவனம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை  மாவட்டத்திற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மூன்று லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.ஒரு குடும்பத்திற்கு தேவையான ஐந்து கிலோ அரிசி,ஒரு கிலோ பருப்பு,2 கிலோ சர்க்கரை,உப்பு,மசாலா பொடிகள்,புளி,மெழுகுவர்த்தி,பெட்ஷீட் உள்ளிட்ட 12 பொருட்களை ஒரு பெட்டியில் அடைத்து வைத்து மூன்று லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.மேலும் நிவாரண பொருட்களை விநியோகிக்கவும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் அந்நிறுவன ஊழியர்களும் உடன் சென்றுள்ளனர்.