கே.வி.ஐ.எம் பி-பள்ளி சார்பில் 1500 மரக்கன்றுகள் நடவு

கே.வி. இன்ஸ்டிடியூட் அஃப் மேனேஜ்மேண்ட் பி-ஸ்கூல் (கே.வி.ஐ.எம் பி-பள்ளி) சார்பில், இடிகரை டவுன் பஞ்சாயத்தில் மரம் நடும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்ச்சியில் இடிகரை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். இடிகரை துணைத் தலைவர் சேகர், செயல் அலுவலர் விஜயகுமார், கே.வி.ஐ.எம் பி-பள்ளியின் நிர்வாக இயக்குநர் குமார், முதல்வர் வித்யா மற்றும் மாணவர்கள், வார்டு கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு டவுன் பஞ்சாயத்தில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 1500 மரக்கன்றுகள் நட்டனர்.