சிம்ஸ் கல்லூரியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு!

சக்தி தகவல் தொடர்பியல் மேலாண்மை கல்லூரியின் கம்யூணிட்டி சென்டர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் இணைந்து மாணவர்களிடம் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வை கல்லூரி வளாகத்தில் நடத்தினர்.

இந்நிகழ்வில்  சிம்ஸ் கல்லூரியின் இயக்குநர் பாலுசாமி, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி கூற மேலாண்மை மாணவர்கள், பேராசிரியர்கள், ஐ.ஓ.பி வங்கி மேலாளர் தன்யா மற்றும் வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்தனர்.

இந்த ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டுமுயற்சியில், 100க்கும் மேற்பட்ட சிம்ஸ் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை கல்லூரி பேராசிரியர் குங்குமராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.