இந்திய கிரிக்கெட் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். தற்போது சுப்மன் கில் உடல்நலம் சீராக ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு காரணமாக சுப்மன் கில் சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவரது பிளேட்லெட் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவருக்கு சிகிச்சை முடித்தாலும் ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்திமருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை (2023) தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
சுப்மன் கில் உடல்நலம் சரி ஆவதற்கு இன்னும் ஒரு வாரம் ஆகும் நிலையில் அவருக்கு பதில் உலகக் கோப்பை தொடரில் ஆடுவதற்கு ருதுராஜ் கெய்க்வாட் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வாலை அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகக்கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் இந்தியா ஆடிய முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.