பஞ்சாலைகள் சங்கத்தின் 90 வது ஆண்டு விழா

கோவையில் செயல்பட்டு வரும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் 90 வது ஆண்டு விழா நவ இந்தியா, ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பீஸ் கோயல், தமிழ்நாடு ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் ரவி சாம் மற்றும் இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார், ஜவுளித்துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.