மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் நாளை (10ம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவில்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
பகுதிகள்:
சர்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம் பாளையம், வையம்பாளையம், கோட்டை பாளையம், கொண்டையம் பாளையம், குன்னத்துார், காளிபாளையம் ஆகிய இடங்களில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின் வாரியாத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.