மணிப்பூரின் வன்முறையை கண்டித்து PUCL மற்றும் மணிப்பூர் மாணவர்கள் ஆர்பாட்டம்

மணிப்பூரில் தொடரும் வன்முறையினால் ஒன்றிய மற்றும் மணிப்பூரின் அரசின் செயலற்ற தன்மையை கண்டித்து மக்கள் சிவில் உரிமைக் கழகமும் (PUCL), கோயம்புத்தூர் குக்கி மாணவர்களின் அமைப்பும் இணைந்து வடகோவை டாடாபாத் துணை மின் நிலையதில் செவ்வாய்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் PUCL யை சார்ந்தவர்கள், கோவையில் இருக்கும் மணிப்பூரின் மாணவர்கள், மற்றும் பிற அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மக்கள் சிவில் உரிமைக் கழக மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை இந்த மணிப்பூர் கலவரத்தை குறித்து பிரதமர் வாய் திறக்காமல் உல்லாச பயணம் மேற்கொண்டு உள்ளார். எதிர்க்கட்சிகள் இதனைக் குறித்து பிரதமர் மோடி அறிக்கையாவது விடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தும் இன்னும் பிரதமர் மௌனமாக உள்ளார். மணிப்பூர் காவி மயமாக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை கண்டித்து இந்த ஆர்பாட்டம் நடக்கிறது என்று கூறினார்.