மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கிய அமைச்சர்

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவக்கல்வி முடித்த மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

உடன், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மருத்துவக்கல்வி இயக்குநர் சாந்திமலர், இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவீந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.